Youtube சேனல் மூலமாக தவறான தகவல்களை பரப்பி வரும் தமிழா பாண்டியன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், அதில் என்னை பற்றியும் நடிகர் திரிஷா குறித்தும் உண்மைக்கு மாறான பொய்யான அவதூறு கருத்துக்களை பலரும் பரப்பி வருகிறார்கள் .

எந்த ஆதாரமும் இல்லாமல் பரப்பி வரும் இந்த தகவலால் என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக இருக்கிறேன். இந்த நபர்கள் மீதும் மற்றும் மேலும் பல youtube சேனல்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வீடியோ பதிவை நீக்க உத்தர பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.