சமூக ஊடகங்களில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு பெண் சிவப்பு நிற சேலையில், நெடுஞ்சாலையின் நடுவே, பாடலொன்றுக்கு நடனமாடுகிறார். அவரின் கணவர் பைக்கில் ஹெல்மெட் அணிந்த நிலையில், அவரைப் படம் பிடிக்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியுள்ளது. இதுவரை 78 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகள் வீடியோவை பார்த்துள்ளனர். இந்த சம்பவம் ஒரு முக்கிய நெடுஞ்சாலையில் நடைபெற்றதால், இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி மற்றும் சிரிப்பில் மூழ்கினர்.

வீடியோவில் எதிர்பாராதவர்களாக சிலர் இந்த நடனக் காட்சியை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளனர். பலரும் இந்த வீடியோவைக் கண்டு, ‘வாழ்க்கையில் பிரச்சனை வேண்டாம்னா, மனைவிய சொல்வதைக் கேளுங்க’ என்று கருத்து தெரிவிக்க, மற்றவர்கள் ‘இது நெடுஞ்சாலையா? வீடியோ ஸ்டுடியோவா?’ என விமர்சனம் செய்து வருகின்றனர்.

இது போன்ற சம்பவங்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் அதிகரித்து வருகின்றன. ரீல்களை உருவாக்கும் ஆசையில், மக்கள் பொது இடங்களில் பரிதாபகரமான செயலில் ஈடுபடுவது உண்டு. இது சாலை பாதுகாப்புக்கும் சமூக ஒழுக்கத்திற்கும் எதிரானதாகவும், தவிர்க்கப்பட வேண்டியதுமாக உள்ளது.

நெடுஞ்சாலையில் நடந்த சம்பவம் என்பதால், இது போக்குவரத்து சட்ட மீறலாகவும் கருதப்படுகிறது. இதுபோன்ற வீடியோக்கள் எதிர்காலத்தில் பெரிய விபத்துகளுக்கும் வழிவகுக்கலாம் என்றே வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.