மேற்கு வங்காளத்தில் உள்ள ஜெய்நகர் பகுதியை சேர்ந்தவர்கள் பரிமல் – அபர்ணா தம்பதி. இத்தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். அபர்ணா சமூக வலைதளத்தில் அதிக நேரத்தை செலவிடுபவர். அதோடு அதிக நண்பர்களையும் சமூக வலைதளத்தில் வைத்துள்ளார்.

இதனால் அபர்ணாவுக்கும் பரிமலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையி்ல் சம்பவத்தன்றும் தம்பதிகளிடையே தகராறு ஏற்பட காய்கறி வெட்டும் கத்தியால் அபர்ணாவின் கழுத்தை அறுத்துவிட்டு பரிமல் தப்பி ஓடி விட்டார்.

இவர்களது மகன் வீட்டிற்கு வந்தபோது அபர்ணா இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவன் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து பரிமலை தேடி வருகின்றனர்.