
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் மிகவும் ஆச்சரியமாகவும் இதெல்லாம் தேவையா என்று திட்டும் விதத்திலும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒருவர் பாலைவனத்தில் நிற்பது போல் அந்த வீடியோவில் இருக்கும் நிலையில் அவர் ஒரு பாம்பினை பிடித்து தன் வாயோடு வாய் கொண்டு சென்று முத்தம் கொடுக்கும் முயற்சி செய்கிறார்.
அவர் பல முறை அந்தப் பாம்பை வாயின் அருகே கொண்டு வந்து முத்தம் கொடுக்க முயற்சி செய்த நிலையில் அந்த பாம்பு வாயை பிளந்து அவரை சீறி சீறி கடிக்க முயறன்றது. இருப்பினும் அந்த நபர் சமூக வலைதள புகழுக்காக தொடர்ந்து பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்ற நிலையில் அவரின் வாயில் கடித்து வைத்துவிட்டது. அவரின் உதட்டை பாம்பு கடித்து வைத்து விடாத நிலையில் அவர் அதனை இழுத்து தப்ப முயல்கிறார். அதோடு வீடியோ முடியும் நிலையில் அதன் பின் என்ன ஆனது என்பது தெரியவில்லை. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
— Wildlife Uncensored (@TheeDarkCircle) June 7, 2025