நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு ரயில்களில் கட்டணங்கள் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது அரசு ஊழியர்களை கவரும் விதமாக சம்பள உயர்வு தொடர்பாக மூன்று அறிவிப்புகள் வெளியாக உள்ளது. அதாவது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அகலவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி உயர்த்தப்பட்டால் அகலவிலைப்படி 50 சதவீதமாக உயரும். இதற்கான அறிவிப்புகள் மார்ச் மாதம் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

அதேசமயம் ஃபிட்மெண்ட் காரணியும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் காரணி 2.5 ஆக உள்ளது மூன்றாக அதிகரிக்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்து வருவதால் அவை உயரும்  என எதிர்பார்க்கப்படுகிறது. அகலவிலைப்படி 50% எட்டினால் அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை படியும் மேலும் அதிகரிக்கும். எனவே இந்த மூன்று அறிவிப்புகளும் தேர்தலுக்கு முன்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.