வங்கக்கடலில் நிலை கண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு முதல் நாளை காலை புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 30-ஆம் தேதி சென்னை உள்பட ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம்  அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.