அரியலூர் மாவட்டத்தில் உள்ள இழுப்பையூரில் கருணா மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் உரக்கடை நடத்தி வருகிறார். இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு பெண் குறிப்பிட்ட வெப்சைட்டில் முதலீடு செய்தால் தினமும் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அதனை நம்பிய கருணாமூர்த்தி சிறிது சிறிதாக 71 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளார்.

ஆனால் எந்த லாபமும் வரவில்லை. செலுத்திய பணமும் திரும்ப வரவில்லை. இது குறித்து கருணாமூர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரியின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்ட ரியாஸ்கான், ரம்யா, மகேஸ்வரி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.