தென்மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள நிலையில் பெங்கல் புயல் உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நேற்று முதல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை பெய்து வருவதால் 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 10 மணி வரையில் தமிழகத்தில் 25 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவை, விருதுநகர், மதுரை, திருச்சி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.