சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்று காலை 10:00 மணி வரையில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரையில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் பிறகு பிப்ரவரி பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பிப்ரவரி 28ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இதேபோன்று மார்ச் 1ஆம் தேதி ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.