
மகளிர் டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற்றது வரும் நிலையில் இந்தியா முதல் சுற்றிலேயே வெளியேறியது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இந்த போட்டியில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய நிலையில் தற்போது முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளது. மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் 6 முறை சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து வென்ற ஆஸ்திரேலியா அணி தற்போது அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது.
அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா களம் இறங்கிய நிலையில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் தென்னாபிரிக்க அணி 2 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணி 2-வது முறையாக அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. மேலும் கடந்த 15 வருடங்களாக ஆஸ்திரேலியா தொடர்ந்து டி20 போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறிய நிலையில் ஆஸ்திரேலிய வின் தொடர் வெற்றிக்கு தற்போது தென்னாப்பிரிக்கா முற்றுப்புள்ளி வைத்து.