தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் இரண்டு மாதங்களாக தகுதி உள்ள பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் தகுதி இருந்தும் மகளிர் உரிமை தொகை கிடைக்காத பல குடும்ப தலைவிகள் மேல்முறையீடு செய்தனர்.

தற்போது மகளிர் உரிமை தொகை திட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க துணை ஆட்சியர், சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் தகுதியான பெண்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார்.