
தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டை பெறுவதற்கு 2 லட்சத்திற்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ள நிலையில் இந்த மாதம் முதல் புதிய அட்டைகள் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணியை தமிழக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. அதாவது ரேஷன் அட்டைகள் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 அரசு வழங்கி வந்ததால் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த மாதம் முதல் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவருக்கு புதிய கார்டுகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவதற்கு தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாக பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். அவர் மகளிர் உரிமை தொகைக்கு அதிக விண்ணப்பங்கள் வருவதை தடுப்பதற்காகத்தான் புதிய ரேஷன் அட்டைகள் வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ரேஷன் அட்டைகள் பெறுவது தமிழக மக்களின் உரிமை என்பதால் உடனடியாக அந்த பணியை தொடங்க வேண்டும் எனவும் அவர் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.