
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கௌரவ கொலை சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது ஹரிதா என்ற பெண் அனீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த காதல் ஹரிதாவின் தந்தைக்கு பிடிக்கவில்லை. இதன் காரணமாக தன் மகள் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தொடர்ந்து அவர்கள் வீட்டை கண்காணித்து வந்த ஹரிதாவின் தந்தை மற்றும் தாய்மாமா இருவரும் நடு ரோட்டில் அனீஷை வெட்டி படுகொலை செய்தனர். அவர்கள் இருவரும் திட்டமிட்டு அனீஷை படுகொலை செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதில் அனீஷ் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் கோபத்தில் ஹரிதாவின் குடும்பத்தினர் வெற்றி படுகொலை செய்த நிலையில் இந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அந்த தீர்ப்பில் கொலை செய்த ஹரிதாவின் தந்தை மற்றும் தாய் மாமா இருவருக்கும் 50,000 அபராதம் விதித்ததோடு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சுரேஷ் மற்றும் இரண்டாவது குற்றவாளியாக பிரபு ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த அபராத தொகையை ஹரிதாவிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.