
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக பாகிஸ்தான் இந்திய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலை இந்தியாவின் பாதுகாப்பு படை அமைப்புகள் தகர்த்து எறிந்தது. நேற்று மாலை இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில் ஆபரேஷன் செந்தூர் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தாக்குதல் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலில் அறிவித்தது ஏன் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.