பீகார் மாநிலம் பெட்டியாவில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஜெனலால் சவுத்ரி என்பவர்  ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் மாணவர்களுக்கு சமஸ்கிருத பாடத்தை கற்றுக் கொடுப்பதற்கு பதிலாக போர்டில் முதலிரவு தொடர்பான படத்தை வரைந்து ஃபஸ்ட் நைட் கொண்டாடுவது எப்படி என பாடம் நடத்தியுள்ளார்.

இது தொடர்பாக மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் கோபத்தில் பள்ளிக்கு வந்து தர்ணா போராட்டத்தில் மாணவர்களுடன் ஈடுபட்டனர். அவர்கள் அந்த சம்பந்தப்பட்ட ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் போர்டில் ஆபாச படம் வரைந்ததாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பள்ளியின் முன்பாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்திய தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.