
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த திருமண விழாவில் அதிர்ச்சி தரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் இருந்து வந்த திருமண ஊர்வலம், புல்பூர் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்கு வந்தது.
வழக்கம்போல் துவாரசார் சடங்குகள் நடந்து, மணமகள் திருமணத்திற்கு தயாராக இருந்தார். ஆனால், மணமகனை பார்த்தவுடன் அவர் அதிர்ச்சியடைந்தார். தனது தந்தையின் வயதுள்ள ஒருவர் மணமகனாக வந்திருப்பதாகக் கூறிய மணமகள், உடனடியாக திருமணத்தை நிராகரித்துவிட்டார்.
மணமகள் தரப்பினர் கூறுகையில், “முன்பே வேறொரு புகைப்படம் காட்டப்பட்டு, அந்த நபரையே மணமகனாக நம்பியோம். ஆனால் திருமணத்திற்கு வந்தவர் வேறு” எனத் தெரிவித்தனர். இந்நிலையிலே திருமண வீட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
மணமகள் திருமணத்தை நிறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பஞ்சாயத்து மணிக்கணக்கில் நடைபெற்றாலும், எவ்வித முடிவும் எடுக்க முடியவில்லை. தகவல் அறிந்ததும், புல்பூர் காவல்துறை மற்றும் UP 112 காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இருப்பினும், மணமகள் தரப்பினர் எந்தவித புகாரும் அளிக்கவில்லை. மாறாக, விருந்தினர்களுக்கு உணவளித்து மனிதாபிமானத்துடன் விடைபெற வைத்தனர். மணமகனை மாற்றியதற்கான குற்றச்சாட்டு காரணமாக, இந்தூரிலிருந்து வந்த பராத் வெறுங்கையுடன் திரும்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான விவாதங்களை எழுப்பியதோடு, சமூக ஊடகங்களிலும் கவனத்தை பெற்றுள்ளது.