இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு பணிகளுக்கு தேர்வாணையம் மூலமாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மாணவர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அனைத்து மாநிலங்களிலும் போட்டித் தேர்வுகளுக்காக பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தனியார் மையங்களும் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

விண்ணப்பிக்க : http://cecc.in

தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் : 044-25954905 / 044-28510537