சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் துறை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அவருக்கு பத்திரிக்கை மன்ற நிர்வாகிகள் டெலஸ்கோப்பை நினைவு பரிசாக கொடுத்தனர்.

இதனையடுத்து விழாவில் பேசிய துணை முதல்வர் கூறியதாவது, பத்திரிக்கையோடு தொடர்பு கொண்டவன் என்ற உரிமையில் எனக்கு இது பெருமை. சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் உட்கட்டமைப்பு மேம்படுத்த 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பத்திரிக்கையாளர் ஓய்வூதியம் 10 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.