தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கோயம்பேட்டில் இருக்கும் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் டெல்லி பயணம் மக்களுக்கு நல்லது நடந்தால் சரி.

இருந்தாலும் பயணம் குறித்து அவர்தான் விளக்கம் கொடுக்க வேண்டும். அமலாக்க துறையை பொறுத்தவரை சோதனை நடக்கிறது என்றால் அதன் பின்னர் என்ன நடவடிக்கை எடுக்கின்றனர் என்பதை அவர்கள் விளக்க வேண்டும். இதில் மக்களுக்கு தெளிவான பார்வை உள்ளது.

மாநிலங்களவை சீட் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பொறுமை கடலினும் பெரிது. தற்போது தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். அடுத்த தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம் என கூறியுள்ளார்.