பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் மூடப்படம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்த நிலையில், அந்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது. எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, தாய் மொழியில் படிக்க வேண்டியது என்பதுதான் முக்கியம். மேலும் பல பாடப்பிரிவுகளை தமிழ் வழியில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவர் விளக்கமளித்துள்ளார்.