ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு இளம்பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவர்களுக்கும் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து புகார் அளிப்பதற்காக கணவன் மனைவி இருவரும் காவல் நிலையத்திற்கு சென்றனர். அப்போது காவலர் பாகாராம் என்பவர் இளம்பெண்ணிடம் வாக்குமூலம் பெற வேண்டும் என கூறியுள்ளார். நேற்று வாக்குமூலம் அளிக்க ஒரு ஹோட்டலுக்கு வருமாறு கூறியுள்ளார். இதனால் இளம்பெண் தனது 3 வயது குழந்தையுடன் அங்கு சென்றார்.

அப்போது காவலர் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன் கணவர் மீது பொய் கேஸ் போட்டு சிறையில் அடைப்பேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்த இளம் பெண் தனது கணவரிடம் கூறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த இளம் பெண்ணின் கணவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் காவலர் பாகாராமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.