
மேற்கத்திய நாடுகளில் திருமணம் என்ற பெயரில் மரம், ஆவி, பொம்மை மற்றும் தன்னை தானே திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் இருந்து வருகிறது. அந்த வகையில் பிரேசில் நாட்டில் வசிக்கும் 37 வயதான இளம் பெண் ஒருவர் நீண்ட நாட்கள் தேடியும் கணவராக ஒரு ஆண் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் இருந்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய அம்மாவிடம் சொல்லிய போது அந்த பெண்ணிற்கு கணவராக ஒரு பொம்மையை வாங்கி கொடுத்துள்ளார். அந்த பெண் அந்த பொம்மையை தன்னுடைய நிஜ கணவனாக ஏற்றுக்கொண்டு அந்த பொம்மையோடு வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் பொம்மையுடன் குடும்ப நடத்தி ஆண் குழந்தை பெற்றெடுப்பது போன்று ஒரு அலப்பறையையும் செய்துள்ளார். மேலும் தன்னுடைய இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக இருப்பதாக குடும்பத்தார் மற்றும் நண்பர்களை வரவழைத்து பார்ட்டியும் கொடுத்துள்ளார் . அதோடு சில மாதங்களுக்கு முன்பாக தன்னுடைய கணவர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் ஒரு சர்ச்சையை கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இணையாவாசிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.