பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் பதில் கடிதம் எழுதியுள்ளார். உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் திருக்கோவிலூர் தொகுதிக்கு உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக தீர்ப்பு தந்திருக்கலாம் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற பொன்முடி தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது சிறை தண்டனையை நிறுத்து வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனையடுத்து திருக்கோவிலூர் தொகுதியில் அவர் எம்.எல்.ஏவாக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.