தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பத்ராத்திரி கொத்தகுடம் நகரில் கிருஷ்ணராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹெரிடேஜ் பால் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். வேலை முடிந்து கிருஷ்ணராவ் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் ராமாவரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சிலர் காற்றாடி பறக்க விட்டனர்.

அப்போது மாஞ்சா நூல் கிருஷ்ண ராவ் கழுத்தில் சிக்கி தொண்டையை அறுத்ததால் அவர் கீழே விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.