
சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் அருகே சேலையூரில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிறந்து 11 மாதமே ஆன அர்ச்சனா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த நிலையில் இரவு நேரம் தம்பதியினர் வீட்டு கதவை திறந்து வைத்துவிட்டு குழந்தையுடன் தரையில் படுத்து தூங்கி உள்ளனர். அதிகாலை 1.30 மணிக்கு குழந்தை அருகில் இல்லாததால் கணவன் மனைவி இருவரும் குழந்தையை தேடி பார்த்தனர்.
அப்போது வீட்டு வாசலில் இருக்கும் பக்கெட் தண்ணீரில் குழந்தை விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.