தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்தவர் ஏ எஸ் ரவிக்குமார் சவுத்ரி. இவர் பாய் மற்றும் யக்னம் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். இவர் பல முன்னணி ஹீரோக்களனுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் சௌக்கியம், ஆதாதிஸ்தா மற்றும் பில்லா நுவ்வு லேனி ஜீவிதம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவரது முதல் படம் சாய் தரம் தேஜின் ஆகும். இந்நிலையில் இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக கடந்த பத்தாம் தேதி அன்று இவர் காலமானார். இவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது.

மூத்த தயாரிப்பாளர் மகேந்திரா (79) கடந்த ஜூன் 11 அன்று காலமானார். சிறிது காலமாக இதயம் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டு குண்டூரில் உள்ள ரமேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது மனைவி மற்றும் மகள் அவருடன் வசித்து வருகின்றனர். மகேந்திரா முன்னதாக தனது மகனை இழந்திருந்தார். பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான மதல ரவி அவரது மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் போலீஸ், லட்சுமி கல்யாணம், தேவா, கூலி நம்பர் ஒன் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.