
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அச்சரப்பாக்கம் பகுதியில் மின்சார கம்பிகளை ஏற்றுக்கொண்டு டிராக்டர் சென்றது. இந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணித்த பள்ளி மாணவன் அபிஷேக் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த இரண்டு மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.