ஆரணி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ டாக்டர் ஜெய்சன் ஜேக்கப் காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜெய்சன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில் ஜெய்சன் மறைவு குறித்து கேள்விப்பட்டு மிகவும் வருத்தமற்றதாகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.