உத்தரபிரதேசம் பரேலி நகரத்தில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் சிலையை சேதப்படுத்த சில அடையாளம் தெரியாத குழுவினர் முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 26ம் தேதி அதிகாலை 2.30 மணி அளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அதில் மூன்று பேர் சிலையில் பொருந்திய மாலை அகற்றியபின், கட்டை மற்றும் கம்பிகளை பயன்படுத்தி குறைந்தது 50 தடவைகள் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து குற்றவாளிகள் தப்பிச்சென்றனர். வீடியோ வைரலானதும் பரேலி போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்து, 5 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். சம்பவத்திற்கான மேலதிக விசாரணை நடைபெற்று வருகின்றதாகவும், சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அம்பேத்கரின் சிலை பாதுகாப்பாக இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், இந்த செயல் சமூகத்தில் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.

 

 

டாக்டர் பிம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் இந்திய சமூக நீதியின் அடையாளமாக விளங்குபவர். மேல் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் மட்டுமின்றி, இந்திய அரசியலமைப்பின் உருவாக்குநராகவும், மனித உரிமைகள் ஆதரவாளராகவும் உயர்ந்தார். ‘ஒரே சமமான உரிமை, ஓர் ஓட்டின் மதிப்பு’ என பலபேரை கல்வி, சட்டம், அரசியல் மூலமாக விழித்துள்ளார். பிறந்தது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் என்றாலும், அவர் உலகளாவியளவில் மனித உரிமைகள் பற்றி பேசும் அளவுக்கு உயர்ந்தார் என்பது பெருமைக்குரியது.

அம்பேத்கர் கல்வியை மாற்றத்தின் ஆயுதமாகப் பார்த்தார். அவர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்பே சமத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. அவரின் எண்ணங்கள் இன்றும் இளைஞர்களுக்குத் தூண்டுதல் அளிக்கின்றன. சிலரால் நடத்தப்படும் சிலை சேதமாக்கும் செயல்கள் அவரின் மாபெரும் பங்களிப்புகளை சீரழிக்க முடியாது என்பதும், இந்த நிகழ்வு அதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கிறது. மேலும் பரேலி சிலை சேதப்படுத்தல் சம்பவத்துக்கு எதிராக சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.