
டெல்லி நகரில் ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கீதா காலனி பகுதியில் இருந்து சந்தைக்கு சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவிலில், 49 வயதுடைய ஆண் ஒருவர் தனது 55 வயது பெண் நண்பருடன் பயணம் செய்துள்ளார். இந்த பயணத்தின் போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தின் போது, மேம்பாலத்திற்கருகே வந்த போது, ஆட்டோவில் இருந்த ஆண் திடீரென கீழே இறங்கி யமுனை ஆற்றில் குதித்து விட்டதாக, அந்த ஆட்டோ ஓட்டுநர் ராகுல் குமார் (36) போலீசாருக்கு அளித்த தகவலில் கூறியுள்ளார். இந்த சம்பவம் காலை 6 மணி முதல் 8 மணி இடைப்பட்ட நேரத்தில் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, தேடுதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு அவருடன் ஆட்டோவில் பயணித்த பெண்ணிடமும் விசாரணை நடைபெறுகிறது. மேலும் அவரின் உடலை 1தேடும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.