
பீகார் முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் கட்சி தலைவருமான லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப்(37). இவர் பீஹார் முன்னாள் முந்திரி. கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதாப்பிற்கு பீகார் முன்னாள் முதல் மந்திரி தரகா ராயின் பேத்தியான ஐஸ்வர்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
திருமணமான சில மாதங்களிலேயே பிரதாப்பும் ஐஸ்வர்யாவும் பிரிந்து விட்டனர். பிரதாப்பும், அவரது குடும்பத்தினரும் கொடுமை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் கடந்த 12 ஆண்டுகளாக அனுஷ்கா என்ற பெண்ணை காதலித்து வருவதாக பிரதாப் தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று புகைப்படத்துடன் பதிவிட்டார்.
இந்த சம்பவம் லாலு பிரசாத்தின் குடும்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தனது பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக கூறி அந்த புகைப்படத்தை பேஸ்புக்கில் இருந்து பிரதாப் நீக்கினார். இந்த நிலையில் பிரதாப்பை 6 ஆண்டுகள் கட்சியிலிருந்து நீக்குவதாக லாலு பிரசாத் அறிவித்துள்ளார். குடும்பம் பாரம்பரிய கொள்கைக்கு முரணாகவும், பொறுப்பற்ற முறையில் பிரதாப் செயல்பட்டு வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக லாலு பிரசாத் கூறினார்.