
சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரவி வரும் ஒரு வீடியோ பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதாவது, ஒரு பெண்ணின் காதுக்குள் பாம்பு புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. காணொளியில், மருத்துவர் ஒருவர் சிறிய இரும்புக் கருவி (ஃபோர்செப்ஸ்) மூலம் பாம்பைப் பிடித்து வெளியே எடுக்க முயற்சிக்கிறார். இந்த வீடியோவின் காட்சி உண்மையிலேயே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தாலும், இதில் காணப்படும் நிகழ்வு உண்மையானதா என்பதைப் பற்றிய சரிபார்ப்பு ஏதும் இதுவரை இல்லை என்பது முக்கியமானது.
இந்த சம்பவம் நடந்ததாம் எனக் கூறப்படும் பின்னணி கூட சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது. அந்தப் பெண் இரவில் தூங்கிக்கொண்டிருக்கும்போது தனக்கு சிறிது சிரமம் இருப்பது போல் உணர்ந்ததாகவும், காலையில் காதில் அசைவு உணர்ந்து மருத்துவமனை சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் வீடியோவில் பாம்பு முழுமையாக வெளியே வருவது போன்ற காட்சி இல்லை. மேலும், ‘X’ இணையதளத்தில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ குறித்து பலர், “இது உண்மையா? ஏன் பாம்பின் வால் முதலில் தெரியவில்லை?” பாம்பு காதுகள் நுழைந்து மீண்டும் பின்னால் திரும்பவும் தலையை மட்டும் வெளியே நீட்டியதா.? என நுட்பமான சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
மேலும், X தளத்தின் AI சாட்போட் ‘Grok’ ஐ அணுகிய ஒருவர், இந்த வீடியோ குறித்து பதில் கேட்டதற்குப் பதிலாக, இது தொடர்பாக எந்த உறுதிப்படுத்தலும் கிடைக்கவில்லை என AI தெரிவித்தது. இது, அந்த வீடியோவை மீண்டும் சந்தேகத்துக்குள்ளாக்கியுள்ளது. மருத்துவ நிபுணர்களும், “சில நேரங்களில் சிறிய பூச்சிகள் காதுக்குள் நுழைவது நிகழலாம், ஆனால் பாம்பு போன்ற பெரிய உயிரினம் நுழைவது மிக அரிதானதும் அபூர்வமானதும்” என தெரிவித்துள்ளனர். எனவே, வைரலாகும் வீடியோக்கள் எதையும் கண்மூடித்தனமாக நம்பாமல், அதன் உண்மைத் தன்மையை சரிபார்க்க வேண்டும் என்பதே முக்கியமான செய்தி.
ये देखकर आप हैरान और परेशान हो जाएँगे!
आखिर कान में सांप घुसा कैसे ?
क्या सांप को निकाल लिया गया होगा ?
क्या महिला ठीक होगी ? pic.twitter.com/skO6jzB59o
— Tanu Balyan (@TnuBlyn1) June 11, 2025