
மத்திய அரசு ஏழை, எளிய பெண்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், அன்னபூர்ணா யோஜனா திட்டம் ஏப்ரல் 1, 2000 ஆம் வருடம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டமானது உணவு கேட்டரிங் தொழிலை தொடங்க விரும்பும் பெண்களுக்கு மட்டுமே.
இதன் மூலம் கடனாக 50,000 ரூபாய் பெறலாம். சமையல் உபகரணங்கள், குளிர்சாதனப்பெட்டி, எரிவாயு இணைப்பு, சாப்பாட்டு மேஜைகள் போன்றவற்றை இந்தக் கடன் மூலமாக வாங்கி கொள்ளலாம். கடன் தொகையை 3 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். இந்தக் கடனைப் பெறுவதற்கு SBI கிளையைத் தொடர்பு கொள்ள வேண்டும்.