நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி எஸ்பிஐ வங்கி தங்கள் தொழிலை விரிவு படுத்த விரும்பும் பெண்களுக்காக ஸ்திரி சக்தி என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. பெண்களால் மட்டுமே நடத்தப்படும் அல்லது குறைந்தபட்சம் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை கொண்ட வணிகங்களுக்கு கடன் வழங்கப்படுகின்றது. 5 லட்சத்திற்கும் குறைவான கடனுக்கு ஜாமீன் எதுவும் தேவையில்லை.

இதன் மூலமாக பெண்களுக்கு ஐம்பது லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டு வருகின்றது. கடன் தொகை மற்றும் கடன் பெறப்பட்ட காரணத்தை பொறுத்து கடன் விதிமுறைகள் மாறுபடும். இதற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் 18 வயது முதல் 65 வயதுக்கு மிகவும் இருக்க வேண்டும் எனவும் கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள எஸ்பிஐ வங்கியை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.