காருக்கு பெட்ரோல் போட்டு விட்டு பணத்தை கொடுக்காமல் ஒருவர் தப்பித்து சென்ற வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.  அந்த வீடியோவில், ஒரு நபர் தனது காரில் பெட்ரோல் நிரப்பிய பின் பணம் செலுத்தாமல் நேரடியாக காரை ஓட்டிச் சென்றதை காணலாம். ஊழியர் முன் வந்து கட்டணம் கேட்கும் முன், அவர் காரை வேகமாக ஓட்டிச் சென்றுவிடுகிறார்.

இதனை பார்த்ததும் பெட்ரோல் பங்க் ஊழியர் என்ன செய்வது என்று அறியாமல் நிற்கிறார். உடனே பின்னால் காத்திருந்த போலீஸ் வாகனம் தப்பி சென்ற காரை துரத்தி சென்றது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் முதல்முறையாக போலீஸ் சரியான நேரத்திற்கு வந்தது என நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.