பூமியை ராட்சத விண்கல் தாக்கும் அபாயம் உள்ளது என்று இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக விண்கல் தின நிகழ்ச்சியில் நடந்த கலந்துரையாடலில் அவர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “அபோபிஸ் என்ற ராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி பூமியைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

2036 ஆம் வருடம் அது மீண்டும் பூமியைத் தாக்கலாம். 370 மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் பூமிக்கும் ,மனித குலத்திற்கும் அதிக ஆபத்தை ஏற்படுத்தும். வரலாற்றில் பல தடவை  இதுபோன்ற ஏராளமான சமபவங்கள் நடந்துள்ளது. எனவே இதுவும் ஏற்படாது என்று எந்த உத்தரவாதமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.