தென்மேற்கு டெல்லியில் ஜனக்கபுரி என்ற பகுதி உள்ளது. இந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கடந்த 3-ம் தேதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பூட்டி இருந்த வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு பெட்டி படுக்கையில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவருடைய வாயில் ஒரு வெள்ளை துணியால் கட்டி வைத்திருந்தனர். கொலை செய்யப்பட்ட பெண் தீபிகா சௌகான் என்பதும் அவருக்கு 26 வயது ஆவதும் விசாரணையில் தெரியவந்தது.

இவருக்கு திருமணம் ஆகி தன்ராஜ் என்ற கணவர் இருக்கும் நிலையில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இதில் தன்ராஜுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவர் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் சம்பாதிக்கும் பணத்தை மது குடிக்க பயன்படுத்தினார். இதனால் தீபிகா ஒரு ஸ்பாவில் வேலை பார்த்து வந்த நிலையில் அவர் அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தார். ‌ இதன் காரணமாக தன் மனைவியின் நடத்தையில் அவர் சந்தேகப்பட்ட நிலையில் கடந்த 29ஆம் தேதி இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு அவர் படுக்கையில் பிணத்தை ஒழித்து வைத்துள்ளார்.

அவர் தன் மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி கொலையை மறைக்க திட்டமிட்டு அதற்காக யூடியூபில் வீடியோ பார்த்த நிலையில் சில நண்பர்களின் உதவியை நாட அவர்கள் உதவ மறுத்துவிட்டனர். அவர் தன் மனைவியுடன் நெருங்கி பழகியதாக சந்தேகப்படும் ஆணை கொலை செய்ய திட்டமிட்டு அவர் டெல்லிக்கு வந்த நிலையில் போலீசார்  அவரை மடக்கிப் பிடித்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.