இன்றைய காலகட்டத்தில் செல்பி மோகம் என்பது இளைஞர்கள் மத்தியில் சற்று அதிகமாகவே இருக்கிறது. இதற்காக எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்க அவர்கள் தயாராக இருக்கின்றனர். அதிலும் மிருகங்களுடன் தற்போது செல்பி எடுப்பது ட்ரெண்டாகி விட்டது என்று கூறலாம். அந்த வகையில் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்ற ஒரு இந்தியர் புலியுடன் சேர்ந்து செல்பி எடுக்க முயற்சி செய்தார். அதாவது அந்த இந்தியர் புலியை ஒரு சங்கிலியால் கயிறில் கட்டி இழுத்து வந்த நிலையில் பின்னர் ஒரு பாதுகாவலர் அங்கு வந்தார்.

 

அந்த நபர் ஒரு குச்சியை வைத்து புலியை உட்காருமாறு கூறிய நிலையில் அந்த இந்தியர் புலியின் அருகே அமர்ந்து செல்பி எடுக்க தயாரானார். அப்போது திடீரென அந்த புலி அவர்மீது பாய்ந்து அவரை கடித்து குதறிய நிலையில் அவர் ஐயோ அம்மா என்று அலற அந்த பாதுகாவலர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தார். மேலும் அவரை தாக்கும் வீடியோ மட்டும் சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் அவருக்கு என்ன ஆனது என்பது தெரியாத நிலையில் பயிற்சி கொடுக்கப்பட்டாலும் அது ஒரு ஆபத்தான மிருகம் தானே என்று பலரும் கூறி வருகின்றனர்.