இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் சமூக வலைத்தளங்களில் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகள் குறித்த வீடியோக்கள் தினம்தோறும் பகிரப்பட்டு வரும் நிலையில் அதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் வீட்டில் மகிழ்ச்சி எப்போதும் பொங்கி வழியும். அந்த அளவிற்கு அனைவரின் கவலைகளை மறந்து சிரிக்க வைத்து விடுவார்கள்.

குறிப்பாக குழந்தைகள் கொடுக்கும் ரியாக்ஷன் மற்றும் செய்யும் சேட்டைகள் என அனைத்தும் மிக அழகாக இருக்கும். அதன்படி தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் குழந்தை ஒன்றிடம் அவரின் தாய் புலி இருக்கும் அறையில் அம்மாவும் அப்பாவும் மாட்டிக் கொண்டால் முதலில் யாரை காப்பாற்றுவார் என்று கேட்டுள்ளார். அதற்கு சிறுமி மிகவும் கூலாக புலியை காப்பாற்றுவதாக கூறி செம மாஸ் காட்டியுள்ளார். இப்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.