
ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பல்லா காவல் நிலையப் பகுதியில், பீட்சா டெலிவரி பாய் ஒருவருக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியைக் ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில், மான்வி பிளேஸ் நயா புல் அருகே டெலிவரி செய்யச் சென்ற சத்யம் துபே என்ற இளைஞர், சில இளைஞர்களால் கடத்தப்பட்டு, வெறிச்சோடிய இடத்தில் மயக்கமடையும் வரை கம்புகளால் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான சத்யம் மற்றும் அவரது நண்பர் விக்ராந்த் இருவரும் டோமினோவின் பீட்சா டெலிவரி ஊழியர்களாகவேலை செய்து வருகின்றனர். குற்றவாளிகள் துப்பாக்கி முனையில் சத்யத்தை டூன் பாரதி பள்ளி அருகே உள்ள வயல்களுக்கு கடத்திச் சென்றனர். அங்கு அவரை அடித்து, ரூ.6,200 பணமும், மொபைலையும் கொள்ளையடித்தனர். பின்னர் சத்யத்தின் முகத்தில் சிறுநீர் கழித்து, அவரை சுயநினைவிற்கு வரும்படி செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து சத்யம் தனது நண்பரிடம் கூறியபோது, விக்ராந்தின் தந்தை போலீசாரை தொடர்பு கொண்டதால் குற்றவாளிகள் தப்பி ஓடினர்.
இந்த சம்பவம் தொடர்பாக பல்லா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தீபக், பாபி மற்றும் தீரஜ் என்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், இவர்கள் மூவரும் நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது. பாபி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்க, தீபக் தனது தந்தையுடன் சலூனில் வேலை செய்கிறார். தீரஜ் ஒரு சுங்கச் சேகரிப்பாளராக பணிபுரிகிறார். மூவரும் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.