
இன்றைய காலகட்டத்தில் பல தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை என அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இது பற்றிய தகவலை சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, பொதுவாக குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு தாய்ப்பால் தவிர வேறு எந்த உணவும் கொடுக்கக் கூடாது. தண்ணீர் கூட ஆறு மாதங்கள் வரை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. ஆனால் குழந்தை பிறந்த சில மாதங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் தாய்ப்பால் கொடுப்பது கிடையாது.
தமிழகத்தில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதில்லை. குழந்தை பிறந்த ஆறு மாதத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பது கிடையாது. இதனால் குழந்தைகளுக்கு எளிதில் நோய் தொற்று ஏற்படுவதோடு 5 பையனுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. குழந்தை பிறந்த 6 மாதங்களுக்குப் பிறகு தாய்ப்பாலுடன் சேர்த்து பிற உணவுகளையும் கொடுக்கலாம்.
ஆனால் தாய்ப்பாலுக்கு பதிலாக வேறு உணவை கொடுப்பதினால் வயிற்றுப்போக்கு மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால்தான் ஒவ்வொரு வருடமும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக உலக தாய்ப்பால் தினம் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார்களுக்கும் நன்மைகள் நடக்கிறது.
அதாவது கருப்பை சுருங்குதல் மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் குறைகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் தாய்ப்பால் வங்கி இருக்கிறது. டாக்டர்களின் அறிவுறுத்தலின் பெயரில் குழந்தைகள் அல்லது தாய்க்கு உடல் நலம் சரியில்லாத நேரத்தில் தாய்ப்பால் வங்கியில் இருந்து பதப்படுத்தப்பட்ட தாய்ப்பால் வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது.
ஆனால் தாய்ப்பாலை விட பதப்படுத்தப்பட்ட தாய்ப்பால் வங்கியில் இருக்கும் தாய்ப்பாலில் சத்துக்கள் குறைவுதான். எனவே அனைத்து தாய்மார்களும் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை உணர வேண்டும். மேலும் தாய்மார்கள் கண்டிப்பாக குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.