பெங்களூருவை சேர்ந்த மாணவி ரக்ஷிதா . 16 வயதான இவருடைய சொந்த ஊர் ஓன்னஹள்ளி. இந்த நிலையில் இவர் தன்னுடைய 16 ஆவது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு பெங்களூரில் இருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில்  மாணவி ரக்ஷிதா  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காரை ஓட்டி வந்த ஓட்டுநர் படுகாயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.,