
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உஸ்கூர் கிராமத்தில் நடைபெற்ற மதுரம்மா கோயிலின் தேர்த்திருவிழாவில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோயிலின் தேரோட்ட விழா வருடம் தோறும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், 150 அடி உயரமுள்ள ஏழு தேர் பக்தர்களால் இழுக்கப்பட்டன. இந்த தேரை இழுக்க 150 காளைகள், 40 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் 50 டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்ட இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்த தேரோட்டத் திருவிழாவின் போது திடீரென வானம் மேகமூட்டமாக காணப்பட்டதோடு பலத்த காற்று வீச தொடங்கியது. இதில் தேர் திடீரென பலத்த காற்றின் காரணமாக சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் இரண்டு பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 10 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
😢 ಹುಸ್ಕೂರು ಜಾತ್ರೆಯಲ್ಲಿ, ದೊಡ್ಡ ನಾಗಮಂಗಲದ ಮತ್ತು ರಾಯಸಂದ್ರ ದ ಎರಡು ತೇರುಗಳು ಮಳೆ ಬಿರುಗಾಳಿಯ ಹೊಡೆತಕ್ಕೆ ಸಿಲುಕಿ ಧರೆಗೆ ಉರುಳಿ ಬಿದ್ದಿದ್ದಾವೆ 🙏🏻 #BengaluruRains pic.twitter.com/ZLV8XM4P5u
— ನಿಶಾ ಗೌರಿ💛❤ (@Nisha_gowru) March 22, 2025