எழுத்தாளர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர் சக்ரவர்த்தி. இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் சர்வம், அரிமா நம்பி, சிகாமணி போன்ற படங்களில் நடித்துள்ளார். பொதுவாக இவர் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு சமூக காலமாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ளனர். இவருக்கு எந்தவித கெட்ட பழக்கமும் கிடையாது என்ற காரணத்தினால் திடீரென்று எப்படி உடல்நிலை மோசமானது? என்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதன் பிறகு தான் இவருடைய நெருங்கிய மருத்துவ நண்பர் ஒருவர் இவரை முழுமையாக பரிசோதித்து பார்த்தபோது அவர் உடலில் ஸ்லோ பாய்சன் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அதன் பிறகு ஆராய்ந்து பார்த்ததில் அவருக்கு நெருக்கமான ஒருவர்தான் அவருக்கு கூடவே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஸ்லோ பாய்சனை உணவில் கலந்து கொடுத்துள்ளார். இவர் ஏன் இப்படி செய்தார் என்பது குறித்து தற்போது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.