சென்னை மாவட்டம் ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் தர்பூசணி வியாபாரியான முரளி என்பவரிடம் இருந்து ரூபாய் 17,000 பணத்தை ஜெயக்குமாரும் அவரது கூட்டாளியான சதீஷும் சேர்ந்து திருடிவிட்டு தப்பி ஓடினர். இதனால் முரளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் ஜெயக்குமாரையும், அவரது கூட்டாளியான சதீஷையும் கைது செய்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமார்  திடீரென பிளேடை விழுங்கியுள்ளார். அப்போது அதனைப் பார்த்த போலீசார் உடனடியாக ஜெயக்குமாரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்‌. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.