
தமிழ் சினிமாவில் குணால் மற்றும் மனோஜ் நடிப்பில் வெளியான வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் ரவிசங்கர். இவர் குதிரை சிறுகதை மூலம் பாக்யா பத்திரிக்கையில் எழுத்தாளராக அறிமுகமானார். இவர் பிரபல இயக்குனர்கள் விக்ரமன் மற்றும் பாக்யராஜ் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.
அதன் பிறகு சூரிய வம்சம் படத்தில் இடம்பெற்ற ரோஜா பூ சின்ன ரோஜா பூ உள்ளிட்ட பல ஹிட் பாடல்களையும் எழுதி உள்ளார். இந்நிலையில் ரவிசங்கர் நேற்று சென்னை கேகே நகரில் உள்ள அவருடைய அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவருடைய மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.