பிரபல கன்னட நடிகர், இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் சி.வி. சிவசங்கர் (90) காலமானார். பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் காப்பாற்ற முடியவில்லை. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

கர்நாடகாவின் பாரம்பரியம், கலாசாரம், மண் ஆகியவற்றின் மீதான தனது அன்பை தனக்கே உரிய பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய கலைஞர் சி.வி. சிவசங்கர். அவரது மறைவுக்கு கன்னட கலை மற்றும் கலாச்சார பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.