
பிரதமர் நரேந்திர மோடி கொச்சியில் நேற்றைய தினம் 3 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான திட்டங்களை துவங்கி வைத்தார். பிரதமர் துவங்கி வைத்ததில் ரூ.94 கோடி மதிப்பிலான திட்டம் மட்டும் மத்திய அரசுடையது என நிதி அமைச்சர் கூறியுள்ளார். இந்நிலையில் நிதியமைச்சர் பால கோபால் தன் சோஷியல் மீடியா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, கொச்சியில் பிரதமர் தொடங்கி வைத்த திட்டங்களில், வாட்டர் மெட்ரோ, டிஜிட்டல் அறிவியல் பூங்கா உள்ளிட்ட 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மாநில அரசின் திட்டங்கள் என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தொடங்கி வைத்த மத்திய அரசின் திட்டமான வந்தே பாரத் ரயிலுக்கு 94 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். அதோடு உரிய நிதி ஒதுக்காமல் கேரள அரசை மத்திய அரசு மூச்சுதிணற வைப்பதாகவும் அந்த வீடியோவில் குற்றம்சாட்டியுள்ளார்.