உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் திருக்கோவில் கட்டப்பட்டு கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்காக பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 4,000 சாமியார்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அப்போது தலைமை பூசாரிக்காக ஆச்சார்யா லட்சுமி காந்த் தீட்சித் என்பவர் செயல்பட்டார். இவர் நேற்று காலை உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பினால் திடீரென காலமானார். அவருடைய வயது 86. மேலும் அவருடைய மறைவுக்கு உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட முக்கிய பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.