
மத்தியப் பிரதேசம், ரத்லாம் மாவட்டத்தில் உள்ள சைலானா நகரில் ஒரு வேதனையூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது கர்ப்பிணியான நீது என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் டாக்டர் சிகிச்சை கொடுக்காமல் இரண்டு முறை மருத்துவமையிலிருந்து திருப்பி அனுப்பினார். இதனால் நீதுவை அவரது கணவர் கிருஷ்ணா க்வாலா தள்ளு வண்டியில் வைத்து அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனைக்குச் செல்வதற்குள், பாதியில்வே குழந்தை பிறந்துவிட்டது. அதன் காரணமாக, புதிதாக பிறந்த குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் மார்ச் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடந்துள்ளது.
मध्य प्रदेश के रतलाम जिले में एक महिला ने अपने नवजात शिशु को खो दिया, जब उसे शनिवार को स्थानीय स्वास्थ्य केंद्र में कथित तौर पर दो बार इलाज से वंचित कर दिया गया। यह स्वास्थ्य केंद्र रतलाम के सैलाना कस्बे में स्थित था। बाद में महिला को मजबूरन हाथ ठेले पर अस्पताल ले जाना पड़ा,… pic.twitter.com/8sX9Ds0D1P
— Ashish rai (@journorai) March 29, 2025
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மருத்துவ ஊழியர்களின் அலட்சியம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சைலானா பிளாக் மருத்துவ அலுவலர் டாக்டர் பி.சி. கோலிக்கு அந்த சம்பவத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் பணியில் இருந்த டாக்டர் ஷைலேஷ் டாங்கே மீது நடவடிக்கை எடுக்க மாநில சுகாதார ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், செத்னா சாரேல் என்ற நர்சிங் ஆபிசர் இடைநீக்கம் செய்யப்பட்டு, கர்ப்பிணையை திருப்பி அனுப்பிய மற்றொரு நர்ஸ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கோபத்தையும் வேதனையையும் உருவாக்கியுள்ளது.